பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
புதுச்சேரி, நவ.15புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கடந்த 10.11.2024 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் நெ.நடராசன் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
புதுச்சேரி மாநில திராவிடக் கழகத் தலைவர் சிவ.வீரமணி கருத்துரை வழங்கினார். தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வா.தமிழ் பிரபாகரன் திருச்சியில் டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டை தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் நடத்துவதன் சிறப்பு மற்றும் அதன் நோக்கத்தினை தெளிவாக எடுத்துரைத்தார்.
மேலும் மாநாடு சிறப்பாக நடை பெறுவதற்காக பகுத்தறிவாளர் கழகத்தினரால் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், மாநாட்டில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகள், மாலை நேர பொதுக்கூட்டம், வெளிமாநில தோழர்கள், பெரியார் உலகம் பார்வை, உணவு ஏற்பாடு, தோழர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் முதலியவற்றைப்பற்றி விளக்கி கூறினார்.
அதன் பின் கருத்துகளை தெரிவித்த பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகத் தோழர்கள் புதுச்சேரி பகுதியில் உள்ள நண்பர்கள், பெரியார் உணர்வாளர்கள், அரசியல் பிரமுகர்களை சந்தித்து மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கான நிதியை பெரும் அளவில் சேகரித்து தருவது என உறுதியளித்தனர்.
திருச்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக மாநாட்டிற்கு புதுச்சேரியின் சார்பாக தனி வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து பெருவாரியான தோழர்களை பங்கு பெறச் செய்து இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டில் புதுச்சேரிக்கு என்று தனி முத்தி ரையை பதிப்ப தற்கான முயற்சியில் அனைவரும் இறங்குவதாக தீர்மா னிக்கப்பட்டது.
மேலும் மாநாட்டின் வெற்றிக்காக தங்களின் தனிப்பட்ட பங்காக தோழர்கள் ஒவ்வொருவரும் ஆர்வ மாக நன்கொடையினை அறிவித்த னர். கூட்டத்தின் முடிவில் முதல் கட்டமாக ரூபாய் 25,000 அறிவிக்கப்பட்டது அனை வரிடத்தும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யது. கருத்தரங்க கூட்டத்திற்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் இளவரசி சங்கர், பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் வாசுகி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் அன்பரசன், மாவட்ட அமைப்பாளர் கே.வி ராசன், புதுவை பிரபா, நாகராசன், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின் முடிவில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பா.குமரேசன் நன்றி யுரை கூறினார்.
மாநாட்டிற்கு நிதி அறிவித்த தோழர்கள் விவரம் வருமாறு:
1. இளவரசி சங்கர் – ரூ.5,000
2. சிவசங்கர் – –ரூ.5,000
3. ராஜி – –ரூ.5,000
4. குமரன் – –ரூ.3,000
5. புதுவை பிரபா –ரூ.2,000
6. சிவராசன் – –ரூ.2,000
7. வாசுகி –ரூ.1,000
8. அன்பரசன் – –ரூ.1,000