இன்றைய தினம் ஓட்டுடைய அரசியல் வாழ்வின் நிலை என்ன? ஊராட்சி, பேரூராட்சி, சட்டமன்றம், முனிசிபாலிட்டி என்பவைகளில் ரகளைக்கும், கலவரத்திற்கும், ஒருவரை ஒருவர் குறை சொல்லுவதும், அடித்துக் கொள்ளுவதற்கும் காரணம் என்ன? ஜனநாயகமேயாகும். பண்பட்ட மக்களிடையே இருக்க வேண்டிய ஜனநாயக வாழ்வு – மாறாகப் பண்படாத காட்டுமிராண்டி மக்களிடையே இருப்பதால் நாடு மேலும் மேலும் காட்டுமிராண்டித் தன்மைக்கும், கீழ்த்தன்மைக்கும் போகுமேயன்றி மேம்பட்ட ஜனநாயக வாழ்வு எப்படி மலரும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’