டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கணக்கெடுக்கிறது தமிழ்நாடு சுகாதாரத் துறை

2 Min Read

சென்னை, நவ.7- தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழை காரணமாக இன்ஃப்ளூயன்ஸா, நுரையீரல் தொற்று மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் அத்தகைய அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயா்ந்து வருகிறது.

ஆய்வு: இதையடுத்து மாநிலம் முழுவதும் சிகிச்சை கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகளும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. மற்றொருபுறம், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங் களைக் கண்டறியும் ஆய்வையும் பொது சுகாதாரத் துறை முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் நிகழாண்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார மாவட்டங்களிலும் கடந்த மாதம் வரை 8,351 பகுதிகளில் கொசுக்களும், லாா்வாக்களும் சேகரிக்கப்பட்டு பொது சுகாதாரத் துறை ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அவற்றில் 112 இடங்களில் இருந்த கொசுக்கள் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடியவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொசுக்களில் எந்த வகை வைரஸ் பாதிப்பு உள்ளன என்பதைக் கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு சுகாதார மாவட்டத்திலிருந்தும் 15 நாள்களுக்கு ஒருமுறை குறைந்தது 7 மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

கொசுக்களின் மாதிரிகள்: அவை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதில் டெங்கு பாதிப்புக்கான வைரஸ் இருந்தால், அவை தனியே பிரிக்கப்பட்டு, டெங்கு காய்ச்சலில் உள்ள நான்கு வகைகளில் எந்த வகை என்பது கண்டறியப்படும். இதன் மூலம் அந்தக் கொசுக்கள் மூலமாக மனிதா்களுக்கு பாதிப்பு பரவலாக ஏற்படுவதற்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
கடந்த ஆண்டுகளில் 14,212 இடங்களில் இருந்து கொசுக்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதித் ததில் 579 பகுதிகளில் டெங்கு கொசுக் கள் இருந்தது கண்டறியப்பட்டது எனத் தெரிவித்தனா்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *