கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

6.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தெலுங்கு பேசும் மக்களை இழிவுபடுத்தி பேசியதாக, நடிகை கஸ்தூரி மீது காவல்துறையில் புகார்.
* வக்பு வாரிய மசோதாவுக்கான நாடாளுமன்ற குழு தலைவர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவைத் தலைவரிடம் புகார்.
* பொது நலன் என்ற பெயரில் தனியாரிடம் இருந்து எல்லா சொத்துக்களையும் கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
* உ.பி.யில் 2004ஆம் ஆண்டு சமாஜ்வாடி அரசால் நிறைவேற்றப்பட்ட மதராசா பள்ளிக்கூடங்களுக்கான சட்டம் செல்லும்; அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது அல்ல. அலகாபாத் நீதிமன்ற தடையை தகர்த்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
* 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வோம்: திருமாவளவன் திட்டவட்டம்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு அனைவருக்கும் நீதியை பெற்றுத் தரும், தெலுங்கானா துணை முதலமைச்சர் நம்பிக்கை.
* தெலங்கானா அரசு நடத்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் அனைத்து பிற்படுத்தப்பட்டோரும் பங்கேற்று விவரங்களை தர வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் வேண்டுகோள்.
* ஜாதியால் நிகழ்ந்த துயரங்களை வெளிக்காட்டும் எக்ஸ்-ரே தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு, ராகுல் பேச்சு. முதலமைச்சர் ரேவந்துக்கு பாராட்டு.
* மகாராட்டிரா மாநில தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை, சரத் பவார் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரையிலான நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அறிவிப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 50 சதவீத இட ஒதுக்கீட்டின் செயற்கையான தடையை தகர்ப்போம். இந்தியாவில் ஜாதிப் பாகுபாடு “தனித்துவமானது” மற்றும் அநேகமாக உலகின் மிக மோசமான ஒன்றாகும். என ராகுல் அய்தராபாத்தில் பேச்சு.
* கோவையில் புதிய ரயில்வே கோட்டம் அமைய வேண்டும், தொழிலதிபர்கள், அமைப்புகள் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு
* ஜார்கண்ட் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பு உருவாக்கம், பழங்குடியினர் உரிமைகள், சமூக நீதி ஆகியவற்றை இந்தியா கூட்டணி உறுதியளித்துள்ளது.
* அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 லிருந்து 35 சதவீத இடஒதுக்கீடாக அதிகரிக்க மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* நாட்டிலேயே மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் தான் வேலை செய்யும் பெண்கள் (43%) அதிகம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *