பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் விளையாட்டுப்போட்டியில் வெற்றிப் பெற்று சாதனை

1 Min Read

திருச்சி, நவ. 5- திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 28.10.2024 மற்றும் 29.10.2024 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக பாரதியார் நாள் மற்றும் சுதந்திர நாள் விளையாட்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட் டங்களின் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் மாணவர்கள் தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

17 வயதிற்கு உட்பட் டோருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் பி.சர்வின் சஞ்சய் முதலிடத்தோடு தங்கப் பதக்கமும், கோலூன்றித் தாண்டுதல் போட்டியில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் பதினோராம் வகுப்பு மாணவர் என்.ஷைபுல் அஜ்மான் ஜெய்லானி முதலிடத்தோடு தங்கப் பதக்கமும் வென்றனர்.
இவ்விரு மாணவர்களும் மாநில அள விலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை மாணவர்கள் மற்றும் பயிற்றுவித்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரை பள்ளியின் தாளாளர்,முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் ஆகியோர் பாராட்டி மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *