ச.சூரியகலா அம்மையாரின் நினைவேந்தல் படத்திறப்பு

2 Min Read

அரசியல்

வேலூர், ஜூலை 29- திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் கழக காப்பாளர் ஆர்.நரசிம்மன் மருமக ளும், வேலூர் மாநகர கழகத் தலைவர் ந.சந்திரசேகரன் இணையருமான ச.சூரியகலா உடல் நலமின்றி 12.7.2023 அன்று காலமானார். அன்றே எவ்வித சடங்குமின்றி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு வேலூர், பாகா யம், ஜானகி மகாலில் 24.7.2023 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழ கப் பொதுக்குழு உறுப்பினர் கு. இளங்கோவன் தலைமையேற்று உரையாற்றினார்.

திருப்பத்தூர் மாவட்ட தலை வர் கே.சி.எழிலரசன் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார். மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா.சரவணன் அம்மையாரின் சிறப்புகளை கூறி உரையாற்றினார்.

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அம்மையாரின் சிறப்புகளை கூறி யும் வாழ்விணையர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தும், குடும்ப முதியோர்களைப் பாதுகாத்தல், மகன் மகள்களை சிறப்பாக வளர்த்து கல்வி பயிலச் செய்தல், பொது வாழ்க்கையில் மற்றவர்க ளுக்கு உதவி செய்பவர்களாகவும் இருக்க வேண்டும் என சிறப்பான தொரு நினைவேந்தல் உரையாற்றினார்.

இந்கிழ்வில் மகள்கள் என். சி.மதிவதனி, என்.சி.மணிமொழி, மருமகன்கள் கே.விநோத், வி.ரஞ்சித், பேரப்பிள்ளைகள் ஆர்.எம்.மகிழன், ஆர்.எம்.சீர்த்தி, வி.கவின், வேலூர் மாவட்ட தலைவர் இர. அன்பரசன், மாவட்ட செயலாளர் உ.விஸ்வநாதன், கழக காப்பாளர் வி.சடகோபன், பொதுக்குழு உறுப் பினர் வி.இ.சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் நெ.கி.சுப்ரமணி, சி.சாந்தகுமார், மாநில மருத்துவர் அணி பொதுச் செயலாளர் மரு பழ.ஜெகன்பாபு, பொ.தயாளன், அ.மொ.வீரமணி, ஆற்காடு வெ. தங்கராசு, ஆற்காடு கோ.விநாயகம்,, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பெ.கலைச்செல்வன், இளைஞரணி சி.எ.சிற்றரசு, அன்பழகன், எழிலன், சி.தமிழ்ச்செல்வன், அசோகன், மாவட்ட மகளிரணி தலைவர் ந.தேன்மொழி, கழக காப்பாளர் ச.கலைமணி பழனியப்பன், வீ.பொன்மொழி, தா.நாகம்மாள், கழக மகளிரணி மாநிலப் பொரு ளாளர் அகிலா எழிலரசன், ஜெ. சுமதி மற்றும் உறவினர்கள், நண் பர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கறி விருந்து குடும் பத்தினர் வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *