Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: வரதட்சணை சர்ச்சை!
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தலையங்கம்

வரதட்சணை சர்ச்சை!

Last updated: November 1, 2024 11:15 am
Published: October 31, 2024
தலையங்கம்
SHARE

திருமணத்திற்காக ரூ. 50 கோடி வரதட் சணையை எய்ம்ஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற ஒரு மருத்துவர் கேட்டுள்ள நிகழ்வு அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் வரதட்சணை சட்டவிரோதமாக இருந்த போதிலும் மறைமுகமாக இன்றும் கொடூரமாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
நன்கு படித்து வெளித்தோற்றத்தில் மதிப் பானவர்களைப் போல் தோற்றமளிப்பவர்கள் கூட வரதட்சணை வாங்குவதை இன்னும் பின்பற்றும் சூழலே நிலவுகிறது. தெலங்கானா வில் ஒரு நிகழ்வு இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடந்துள்ளது.

அய்தராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நிபுணராக இருக்கும் பெண் மருத்துவருக்கு அதே துறையைச் சேர்ந்தவரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

இதனை அடுத்து எய்ம்ஸ் மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவரோ தனக்கு வரதட் சணையாக ரூ.50 கோடி வேண்டும் என்று கேட்டுள்ளார்.

Also read

தலையங்கம்
ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் பின்னணி
உச்சநீதிமன்ற நீதிபதி கவாயின் கருத்தாழம்!

அவர் எய்ம்ஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வந்தவர். இது தொடர்பாக மற்றொரு பெண் மருத்துவர் கூறும் போது, அவர் இதே போன்று தனது சக தோழிக்கு மாப்பிள்ளை பார்த்த போதும் கோடிக்கணக்கான ரூபாய் வரதட்சணை கேட்டதாகவும் – தங்களது கல்வியை இப்படி கோடிக்கணக்கான ரூபாய் வரதட்சணை வாங்குவதற்கு பயன்படுத்துவது வெட்கக்கேடானது என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வரதட்சணைக்காக அந்தப் பெண் மருத்துவரின் பெற்றோர் தங்களது ஒட்டு மொத்த வாழ்நாள் சேமிப்பையும் கொடுக்க வேண்டி இருப்பதாகவும், அவர்களுக்கு மற்றொரு மகளும் இருப்பதாகவும் கூறி யுள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது சமூகவலைதள பக்கங்களில் பேசுபொருளாகி பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அவர் ஒரு மருத்துவர்; சொந்தக் காலில் நிற்க திராணி இல்லாமல் இப்படி, வரதட்சணையை நம்பி இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சமூகவலைதளங்களில், ‘‘இப்போதெல்லாம் பல கோடி ரூபாயை கொட்டி படிக்கவேண்டி உள்ளது, வாழ்நாள் முழுவதும் வேலை பார்த்தால் கூட அதை சம்பாதிக்க முடியாது. ஆகையால் வரும் மனைவியின் மூலம் வரதட்சணையாக வரும் பணத்தில் ஈடுகட்டப் பார்க்கின்றனர் – இதில் தவறு ஒன்றும் இல்லை. ரூ.50 கோடி வாங்கினாலும் கணவன் மனைவி இருவரும் தானே அதை அனுபவிப்பார்கள்’’ என்றும் கூறி ரூ.50 கோடி வரதட்சணை கேட்ட மருத்துவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

வரதட்சணை கேட்பது சட்டப்படி குற்றமே! வரதட்சணை கேட்பவராக இருந்தாலும், அப்படிக் கேட்பவர்களுக்கு ஆதரவாக நிற்பவர்களும், கருத்துத் தெரிவிப்பவர்களும் குற்றவாளிகளே!

அதிக செலவு செய்து படிக்கிறார்களாம். அதனால் மனைவி மூலம் வரதட்சணைத் தொகையைப் பெறுகிறார்களாம்!
அப்படிப் பார்க்கப் போனாலும் அந்தப் பெண்ணும் மருத்துவர்தானே, அவரும் அதிகம் செலவு செய்து தானே படித்து மருத்துவராகி யிருக்கிறார். அதை வசதியாக மறைப்பது ஏன்?

எல்லாவற்றையும்விட பெண் என்றால் அடகு பொருளா? திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும்தானே! பெண் வீட்டார் மட்டும் ஏன் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழாதா?

பெண் என்றால் ஆணுக்கு அடிமை என்ற மனவியாதிதான் இதற்குள் அடங்கியிருக்கிறது!
ரூ.50 கோடி வரதட்சணை கேட்ட மருத் துவர் மீதும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆசாமிகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை அவசியமாகும்.
இது ஒரு பாடமாக மற்ற ஆண்களுக்கும் அமையட்டும்!

Ad imageAd image
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு “தமிழ்ச் செம்மொழி”– மாபெரும் கண்காட்சி! ஜூன் 9 வரை நீட்டிப்பு!
‘‘பெண்கள் பலகீனமானவர்கள்’’ என்ற  பொதுப் புத்தி ஒழிக்கப்பட வேண்டும்!  
செல்வம் சேர்த்தால்
எதிலும் மதவாதக் கண்ணோட்டமா
ஆளுநர் திருவாய் ‘மலரட்டும்!’
TAGGED:திருமணம்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?