தமிழர்களின் பண்டிகையா தீபாவளி? காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு துண்டறிக்கை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

1 Min Read

காஞ்சிபுரம், அக். 30- காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ‘தமிழர் களின் பண்டிகையா தீபாவளி?’ என்னும் விழிப்புணர்வுத் துண் டறிக்கை காஞ்சிபுரம் காந்தி சாலை, காமராசர் சிலை அருகில் 28.10.2024 அன்று மாலை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் முனைவர் பா. கதிரவன், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ. முரளி, மாவட்ட கழக இணை செயலாளர் சீத்தாவரம் ஆ. மோகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இளம்பரிதி, மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் வீ. கோவிந்தராஜ், அறிவு வளர்ச்சி மன்றத்தின் அமைப்பாளர் நாத்திகம் நாகராசன், தமிழ் உரி மைக் கூட்டமைப்பு தோழர் காஞ்சி அமுதன், எழுச்சிப் பாடகர் உலக ஒளி, மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் தோழர் மகேஷ், தோழர் பாலு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் மகேஷ் மற்றும் தோழர்கள், தோழர் ரவி பாரதி, தன்னாட்சித் தமிழகம் தோழர் பெ. பழனி, தோழர் பாரதி விஜயன், தோழர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *