முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என காட்சிப் பதிவை வெளியிட்டு தமிழ்நாட்டு மக்கள், இளைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில்,
தமிழ்நாட்டின் இளைஞர், மாணவர் சமுதாயத்திற்கு
உங்கள் குடும்பத்தை சார்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக ஓர் உருக்கமான வேண்டுகோள்…
போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும். போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம்!
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்காட்சிப் பதிவில் கூறியுள்ளார்.