உ.பி. இடைத்தேர்தலில் காங்கிரசுடன் சமாஜ்வாடி கூட்டணி தொடரும்: அகிலேஷ்

0 Min Read

எடாவா, அக்.11 உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாடி கூட்டணி தொடரும் என்று கட்சியின் தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 6 தொகுதிகளின் சமாஜ்வாடி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவின் நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்துவதற்காக கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் எடாவா வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ், ‘‘இந்தியா கூட்டணி இருக்கும் என்பதை மட்டுமே நான் கூற விரும்புகிறேன். சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொடரும். இது அரசியல் குறித்து விவாதிப்பதற்கான நேரமில்லை” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *