இலால்குடி கழக மாவட்டத்தில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா

1 Min Read

மண்ணச்சநல்லூர், அக். 8- தந்தை பெரியார் அவர்களின் 146வது பிறந்தநாள் விழாவில் இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் நகரம் மற்றும் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் வாழ்மானபாளையம் கீழுர் பெரியார் மன்றத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு ஒன்றிய கழகத் தலைவர் கு.பொ.பெரியசாமி தலைமையில் கழகத் தோழர்கள் ஆசைத்தம்பி, பாலச்சந்திரன், முத்துசாமி, அண்ணாத்துரை, வெங்கடாசலம், பாவேந்தர், மகளிர் மற்றும் பெரியார் பிஞ்சுகள்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் அதன்பின் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது
பின்னர் வாழ்மானபாளையம் திருப்பைஞ்ஞிலி பாச்சூர் நொச்சியம் மண்ணச்சநல்லூர் ஆகிய ஊர்களில் தோழர்கள்இல்லங்களில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இறுதியாக வேன் மூலம் சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *