தமிழ்நாட்டில் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

viduthalai
1 Min Read

சென்னை, அக்.7- தமிழ்நாட்டில் 3 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப் பித்த நிலையில் ஒரு லட்சம் பேருக்கு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வழங்கப் பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மகளிர் உரிமைத் தொகை மற்றும் நாடாளு மன்ற தேர்தல் போன்ற பல்வேறு காரணங்களால் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் தற் காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி தகுதியான வர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் நிலையில் பரிசீலனையில் உள்ளவர்களுக்கும் ‘ஸ்மார்ட் கார்டுகள்’ விரைவில் வழங்கப் படும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

கடந்த மாதம் முதல் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அமைச்சர் அர.சக்கரபாணி ஒரு பேட்டியில் புதிய குடும்ப அட்டைக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்தால் 15 நாட்களில் ‘ஸ்மார்ட் கார்டு’ கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த மாதம் முதல் நியாய விலைக் கடைகளில் கூடுதலாக மக்களுக்கு கோதுமை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் புதிய குடும்ப அட்டைக்கு காத்திருப்போர் உடனடி யாக விண்ணப்பித்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *