குலசேகரன் பட்டினம், அக்.5- குலசேகரன் பட்டினம் அருகே விபத்தில் சிக்கிய 3 பக் தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாய மடைந்த 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது.
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை கீழ செக்காரக்குடியைச் சேர்ந்த பக்தர்கள் 3.10.2024 அன்று சரக்கு உந்துவில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடி யேற்றத்துக்கு சென்றனர். நோன்பிருந்த பக்தர்கள் கோவிலில் காப்பு அணிந்து வழிபட்ட பின்னர் மாலையில் தங்களது ஊருக்கு சரக்கு உந்துவில் புறப்பட்டு சென்றனர்.
குலசேகரன்பட்டினம் அருகே கல்லாமொழி அனல் மின் நிலையம் அருகில் சென்ற போது, எதிரே வந்த மினி லாரியின் மீது எதிர் பாராதவிதமாக லோடு ஆட்டோ பயங்கரமாக மோதியது. இதில் லோடு ஆட் டோவில் இருந்த கீழ செக்காரக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணபெரு மாள் (வயது 25), வடிவேலு (17) பெரும்படையான் (20), ஓட்டுநரான சுடலைவீரன் (24) உள்ளிட்ட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனே அக்கம்பக்கத் தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக் காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணபெருமாள், வடிவேலு, பெரும்படை யான் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுடலைவீரன் உள் ளிட்ட 8 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக் கப்படுகிறது.