வைக்கம் பெரியார் நினைவக சீரமைப்புப் பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

1 Min Read

அரசியல்

கேரளாவில் வைக்கம் பகுதியில் பெரியார் நினைவகத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் தந்தை பெரியார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு, வெற்றி கண்டதன் நினைவாக, தமிழ்நாடு அரசு சார்பில் 70 சென்ட் பரப்பில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அருங்காட்சியகம், நூலகம், சிறுவர் விளையாட்டுப் பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளன. மேலும், அமர்ந்த நிலையில் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடம் மறுசீரமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அப்பணிகள் 7 மாதங்களுக்குள் முடிவடையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *