கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக திராவிடர் கழகக் கொடியேற்று விழா

Viduthalai
1 Min Read

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக தந்தை பெரியாருடைய 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகக் கொடியேற்று விழா வெள்ளமடம் கிறிஸ்து நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் திராவிடர்கழகக் கொடியினை ஏற்றிவைத்தார். திராவிட நட்புக் கழக பொறுப்பாளர் விஷ்ணு, மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ். அலெக்சாண்டர், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமார தாஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் எஸ்.குமாரதாஸ், தோவாளை ஒன்றிய தலைவர்
மா.ஆறுமுகம், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், மாவட்ட கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, தோழர்கள் தும்பவிளை மு.பால்மணி, நல்லூர் பெருமாள், பெரியார் பற்றாளர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *