‘மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது’ முதலமைச்சர்

1 Min Read

சென்னை, செப்.25- வெளிநாடு பயணம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கையே வெள்ளை அறிக்கைதான். தமிழ்நாடு அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் கூறியதாவது:

செய்தியாளர்: ரொம்ப நாட்களாகவே அமைச்சரவை மாற்றம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங் கப்படுவதாக செய்திகள் வருகிறது. நீங்களும், சொன்னதைத்தான் செய்வோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். அதற்கு உங்கள் பதில்?
பதில்: ஏமாற்றம் இருக்காது… மாற்றம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வில்சன், கலாநிதி விராசாமி, கிரிராஜன், துணை மேயர் மகேஷ்குமார், மண்டல குழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர்கள் அய்சிஎப் முரளி, நாக ராஜன் உள்பட பலர் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *