தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு முக்கிய ஆணை!

1 Min Read

சென்னை, செப்.24- அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது அகவலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, அகவலைப்படி நிலுவைத் தொகை குறித்து அறிவிப்புகளும், புதிய நடைமுறை, விதிமுறை, நிபந்தனைகள் சார்ந்தும் தகவல்கள் அவ்வப்போது அரசு சார்பில் வெளியிடப்படும். அந்த வரிசையில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சார்ந்து முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவு என்ன?

அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்வதில் அதிக காலதாமதமும் நடைமுறை சிக்கல்கள் அதிகமாக உள்ளதாகவும் அரசு கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து தற்போது நடைமுறையில் உள்ள செயல்முறையை கீழ்கண்டவாறு எளிமைப்படுத்துவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.

இனி வரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் (IFHRMS) கணவன் மற்றும் மனைவியின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். எனவே குடும்ப ஓய்வூதியம் கோரும் தேர்வுகளில் கணவன் மற்றும் மனைவியின் இறப்பு சான்றிதழ் மட்டுமே சமர்ப்பித்தால் போதுமானது என்று அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.

அதேபோல தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின்கீழ் நியமனதாரரை நியமனம் செய்வது தொடர்பான தெளிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ், ஓய்வூதியதாரரின் விருப்பத்தின் பெயரில் அவருடைய ஓய்வூதியத்திலிருந்து சந்தாத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதியர் இறக்கும் நேர்வில் அவர்தம் துணைவருக்கோ அல்லது அவருடைய துணைவர் உயிரோடு இல்லாதபோது ஓய்வூதியர் நியமனம் செய்த நியமனதாரருக்கோ இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த தொகையானது வழங்கப்படும்.

மேலும் துணைவர் உயிரோடு இல்லாமல் இருந்தாலோ அல்லது நியமனதாரர் எவரும் நியமிக்கப்படாத நிலையில், ஒட்டுமொத்த தொகையானது மறைந்த ஓய்வூதியரின் வாரிசுகளுக்கு சமமாக பிரித்து வழங்கப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *