100 நாள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள், 21 உயிரிழப்பு மோடி அரசின் படுதோல்வி!

1 Min Read

காங்கிரஸ் விமர்சனம்

புதுடில்லி, செப்.18 மோடி அரசு தோற்றுவிட்டதாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ரயில் பயணம் என்பது தொடர் விபத்துகளால் பலி பீடமாக்கப்பட்டு வருகிற செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவ ரத்தின்படி கடந்த 10 ஆண்டுகளில் பலவிதமான ரயில் விபத்துகளில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரி ழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் அலட்சிய போக்கினால் ரயில்வே துறை சீரழிந்ததைப் போல எந்த ஆட்சிக் காலத்திலும் நிகழ்ந்ததில்லை என காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் மோடி அரசு தோற்றுவிட்டதாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள பதிவில்; 3ஆவது முறை ஆட்சி யில் பிரதமர் மோடியின் அரசு தோற்றுவிட்டது. பிரதமர் மோடியின் முதல் 100 நாள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள், 21 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *