சென்னை, செப். 14- இன்டராக்டிவ் டெக்னாலஜீயில் உலகளாவிய முன்னணி நிறுவனமாகிய ஸ்மார்ட் டெக்னாலஜீஸ், சென்னையில் தனது சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் போர்டு எம்.எக்ஸ். சீரீஸ் மற்றும் ஸ்மார்ட் போர்டு ஜி.எக்ஸ். சீரீஸ் ஆகிய இரு இன்டராக்டிவ் டிஸ்ப்ளேகளை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இன்டராக்டிவ் தொழில்நுட்பச் சந்தையில் 35 ஆண்டு களுக்கும் மேலான உலகளாவிய அனுபவத்துடன் உள்ளூர் விநியோக நிறுவனங்கள், இந்தியாவிலேயே உற்பத்தி, திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட உள்ளூர் கல்வி சார்ந்த உள்ளடக்கம் ஆகியவற்றை இது கொண்டுள்ளது.
ஸ்மார்ட்டின் இன்டராக்டிவ் டிஸ்ப்ளேக்கள் மற்றும் மென்பொருளானது, ஆசிரியர்களின் நேரத்தை மிச் சப்படுத்தும் வகையிலும், மாணவர்களை கற்றலில் ஈடுபடுத்தும் வகையிலும் பயன்படுத்த எளிதான அம்சங் களுடன் வாழ்க்கைக்கான கற்றலைத் தரும் வகையில் உரு வாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்நிறுவன நிர்வாகத் துணைத் தலைவர் ஜெஃப் லோவ் கூறுகையில், “இன்டராக்டிவ் டச் தொழில்நுட்பம் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித் துறைத் தலைவர்கள் ஆகியோரிடையே முக்கியமான தொடர்புகளை உருவாக்க உதவுவோம் என்பதே நாங்கள் அளிக்கும் வாக்குறுதி. இந்த வாக்குறுதியையும் எங்கள் முன்னணி தயாரிப்புகளையும் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்களிடம் கொண்டு செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
சிறுதொழில் முனைவோர்களுக்கு
எளிதாகக் கடன் பெறும் திட்டங்கள்
சென்னை, செப். 14- கடன் திட்டங்களை சந்தைப்படுத்தும் நிறுவனமாகிய ருலோன்ஸ், சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வீட்டுக் கடன் திட்டங்களை சென்னை பிராந்தியத்தில் விநியோகிக்க உள்ளது.
மிகச் சிறந்த விநியோகக் கட்டமைப்பைக் கொண்டுள்ள ருலோன்ஸ் நிறுவனம், சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வீட்டுக் கடன் திட்டங்களை சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விநியோகம் செய்வதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது. இதன் மூலம் எஸ்.எச்.எஃப்.
நிறுவன திட்டங்கள் மேலும் பெருவாரியான மக்களைச் சென்றடைய வழியேற்பட்டுள்ளது.
இது குறித்து ருலோன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கவுஷிக் மேத்தா கூறுகையில், “எங்களது விநியோக ஒருங்கிணைப்பு வசதி மூலம், எங்கள் நிறுவனத்தால் எஸ்.எச்.எஃப். நிறுவன வீட்டுக் கடன் திட்டங்களை பெருவாரியான மக்களிடம் சென்று சேர்க்க முடியும். மேலும் டிஜிட்டல் தளத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் இரு நிறுவனங்களும் கூட்டாக தடையற்ற முறையில் கடன் விண்ணப்பங்களுக்கு விரைவாக ஒப்புதல் வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இரு நிறுவனங்களிடையிலான ஒப்பந்தம் குறித்து சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி. லட்சுமிநாராயணன் கூறுகையில், “எங்களது வீட்டுக் கடன் திட்டங்கள்
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் வீட்டுக் கடன் மற்றும் சொத்துகள் மீதான கடன் பெறுவது, புதிய வீடு வாங்கும் கனவுடன் இருப்பவர்களின் எண்ணத்தை நனவாக்குவது மற்றும் சிறு வணிகம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனர்களும் எளிதாகக் கடன் பெற வழியேற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.