கன்னியாகுமரி மாவட்டத்தில் திராவிடர் கழகத்தில் இணைந்த கல்லூரி மாணவர்

Viduthalai
0 Min Read

நாகர்கோவில், செப்.11- கன்னி யாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கிருஷ்ணன் கோவில் ,அறுகுவிளைப் பகுதியைச் சேர்ந்த புதிய தோழர் பொறியியல் கல்லூரி மாணவர் ஜெகன்.
அவர் நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அய்க்கியபுரம் எஸ்.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலையில் குமரி மாவட்ட திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
அவரை குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தந்தை பெரியாருடைய நூல்களை வழங்கி வரவேற்றார். புதிய மாணவர்களை திராவிட மாணவர் கழகத்தில் இணைக்க பரப்புரை செய்வதாக மாணவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *