புதுக்கோட்டை, செப். 2 புதுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார்146 ஆவது பிறந்த நாள் சமூகநீதி நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி நேற்று (1.9.2024) காலை நடத்தப்பட்டது.
பேச்சுப் போட்டியின் தலைப்பு களாக 1. ‘‘பெரியார் ஒரு கேள்விக்குறி, ஆச்சரியக்குறி’’ 2. ‘‘என்றும் தேவை பெரியார்’’ 3.‘‘பெரியார் காண விரும்பும் சமுதாயம்’’ 4.‘‘மண்டைச்சுரப்பை உலகு தொழும்’’ 5.‘‘புரட்சியாளர் பெரியார்’’, 6.‘‘பெரியாரால் வாழ்கிறோம்’’
7. ‘‘பெரியார் பிறவாமல் இருந்தால்’’
8. ‘‘சுய சிந்தனையாளர் பெரியார்’’ ஆகிய தலைப்புகள் வழங்கப்பட்டன.
இந்தப் பேச்சுப் போட்டியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 18 மாணவ, மாணவியர் வந்து கலந்து கொண்டு பேசினார்கள். அவர்களில் முதல் பரிசான ரூபாய் 3 ஆயிரத்தை மாவட்ட ப.க. அமைப்பாளர் தி.குண சேகரன் வழங்கினார். அதனை திருச்சி அரசுக் கலைக் கல்லூரி மாண வர் சு.வைரவளவன் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பரிசான ரூபாய் 2 ஆயிரத்தை மாவட்ட மகளிரணியைச் சேர்ந்த ச.ஆர்த்தி முருகவேல் வழங்கி னார். அதனை புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியின் மாணவி ர.பபிதா பெற்றுக் கொண்டார்.
மூன்றாம் பரிசான ரூபாய் ஆயிரத்தை வி.பார்த்தசாரதி வழங்கினார். அதனை திருச்சி சட்டக் கல்லூரி மாணவி அ.அருணா பெற்றுக் கொண்டார்.
புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் நடுவர்களாக மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாநில ப.க. அமைப்பாளர் அ.சரவணன் ஆகியோர் பங்காற்றினர். மேலும் மாவட்டக் காப்பாளர் ஆ.சுப்பையா, ப.க. அமைப்பாளர் தி.குணசேகரன், பொன்னமராவதி ஒன்றியத் தலைவர் வீ.மாவலி, இரா.வெள்ளைச்சாமி, ம.மு.கண்ணன், பெரியார் பிஞ்சு சு.க.கதிரவன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.