கன்னியாகுமரி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு பெரியார் பிறந்த தின விழா பேச்சுப்போட்டி

Viduthalai
1 Min Read

நாகர்கோவில், ஆக. 26- பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சு போட்டி குமரிமாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பெரியார் ஒரு கேள்விக்குறி, பெரியார் ஒரு ஆச்சரியக்குறி, சமூக புரட்சியாளர் பெரியார், பெரியாரும் பெண்ணுரிமையும், பெரியார் ஒரு தொலைநோக்காளர் பெரியார், அறிவியல் பார்வையும் அணுகுமுறையும், ஆகிய தலைப்புகளில் நடைபெற்றது.
பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு தலைமை தாங்கினார்.

மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம்; பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார். கல்லூரி பேராசிரியர் மலர் ரத்னா போட்டியினை ஒருங்கிணைத்தனர். அதிகமான மாணவ,மாணவியர்கள் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பெரியாருடைய வரலாறு குறித்து பேசினர். பகுத்தறிவாளர்கழக செயலாளர் எம். பெரியார் தாஸ் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *