கொள்கை வீரர் சு. இளங்கோவன் மறைந்தாரே!

1 Min Read

திருச்சி மாவட்ட திராவிடர் கழக மேனாள் இளைஞர் அணி தலைவரும், திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் அவர்களின் மைத்துனருமான கொள்கை வீரர் மானமிகு சு. இளங்கோவன் (வயது65) இன்று (25.8.2024) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.

அவருடைய தந்தையார் மறைந்த ஆசிரியர் சுந்தரேசன் கீழ்வேளூரில் பணியாற்றி, தந்தை பெரியாரின் தன்மானப் பேரவையில் சீரிய முறையில் தொண்டாற்றியவர் ஆவார்.

அந்தக் குடும்பமே தந்தை பெரியாரின் கொள்கையைப் பின்பற்றி வாழும் குடும்பமாகும்.
அவர் பிரிவால் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரது வாழ்வினணயர் எலிசபத், அவரது மைத்துனர் திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் மற்றும் குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவர்,
25.8.2024

திராவிடர் கழகம்

குறிப்பு: இறுதி நிகழ்ச்சி நாளை (26.8.2024) காலை
11 மணிக்கு நடைபெறும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *