மூளைக்குப் பூட்டப்படும் விலங்குகள்!

Viduthalai
3 Min Read

 மூளைக்குப் பூட்டப்படும் விலங்குகள்!

அரசியல்

மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொள்ளுவதற்காக சிங்கப்பூர் வழியாக (மாநாடு கோலாலம்பூரில் ஜூலை 21, 22, 23 நாட் களில் மிக சிறப்பாக நடத்தப் பெற்றது) பயணம் செய்தபோது   அன்புராஜ் அவர்களது நண்பர் பரணி அவர்கள் அவரது வாழ்விணையருடன் எங்களை வந்து சந்தித்தார். அவர் ஒரு பிரபல மி.ஜி. கம்பெனியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்.

அவர்களுக்கு கட்டாயம் பாடப் புத்தகம் போல் படித்துப் பயன் பெற வேண்டிய நூல் என்பதாக ‘Brain Chains’ என்ற ஒரு நூலை  எனக்கு அளித்தார்.

இதனை எழுதியவர் தியோ காம்பர் நோலி Theo Compernolle  என்ற மருத்துவ டாக்டர்.

இந்த நூலாசிரியர் டாக்டர் தியோ, மருத்துவ டாக்டர் Medical Doctor  மட்டுமல்ல, சைகோ தெரப்பிஸ்ட், மனநல மருத்துவ நிபுணரும்கூட; அதைத் தாண்டி அவர் தொழில் துறையினருக்கு ஆலோசனையாளர்.

பல மாறுபட்ட துறைகளிலும் இவர் சிறந்து விளங்கும் ஒரு பல்கலை அறிஞர் – மருத்துவம், உயிரியல் (Biology) மனோதத்துவம், நரம்பியல், உடற்கூறு (Physiology) இவற்றுடன் நிர்வாக இயல் (Management).

இவர் அடிக்கடி வகுப்பு எடுப்பதைப் போல பல்வேறு அரிய வழிமுறைகள், அறிவுரைகளை தொழில் துறை தகவல் தொழில் நுட்பத் துறை, கல்வி அறிஞர்கள் – இவர்களுக்கு கற்றுத் தரும் வகையில் ஆற்றிய பொழிவுகளின் தலைப்பு “மிகப் பயனுள்ளதாகவும் எளிமையாகவும் அறிவியலைத் தருவது எப்படி” என்பதாகும்!

வள்ளுவர் கூறியபடி,

“அறிவு அற்றம் காக்கும் கருவி” அல்லவா? அறியாமை இருளை விரட்டும் வெளிச்சம் அல்லவா அறிவு? அகராதிப் பொருள்படி அழிவு வராமல் காக்கும் கருவி.

அப்படிப்பட்ட ஒரு தலை சிறந்த ஆற்ற லாளரான இந்த மருத்துவ மாமேதை எழுதியுள்ள இந்த மூளை வளர்ச்சி,  பாதுகாப்பு, முழுப்பயன் விளையும் வகையில் பயன்பாட்டிற்கான தேவையை இந்நூலில் மிக எளிய நடையில் எவருக்கும் விளங்கும் வகையில் கூறுகிறார்!

தான் இத்துறையில் இவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபட்டு படித்து, ஆய்வு செய்து, வளருவதற்கு முதல் தூண்டுதல் தனது தாய்தான் என்று குறிப் பிடும் டாக்டர் தியோ, குழந்தைப் பருவத்தில் எனது அம்மா எனக்குப் போதித்த பாடம்.

Do One thing

Do your best

Finish up and Tidy up

“ஒரு வேலையைஎடுத்துக் கொள்

அதை எவ்வளவு சிறப்புடன் செய்ய முடியுமோ அதை செய்து முடித்து விடு- சீர்மை ஒழுங்குடன்”

இதை உள்ளத்தில் இருத்தி அவர் படித்து முன்னேறி, மற்றவர்கள் தங்களது மூளையில்  பூட்டப்பட்ட விலங்குகளைக் கண்டறிந்து, உடைந்தெறிந்து முன்னேறுவது எப்படி என்பதை தனி படிப்புக் கால பணி – ஆய்வுக் காலத்தில் கற்றுத் துறையேகிய அறிஞராகியுள்ளார்.

நமது மூளையின் எடையோ குறைவுதான். அதன் பரப்பளவோ உடலின் மற்ற உறுப்புகளுடன் ஒப்பிட்டால் மிக மிகக் குறைவுதான்.

ஆனால் அதன் முக்கிய, மிக முக்கிய – பணியை நினைத்தாலோ, அதுபற்றி அவரே கவிதை நடையில் கூறுவதைக் கேட்போமா?

“மூளை என்பது வானத்தைவிட மிகவும் விரிவானது!

“மூளை என்பது கடலைவிட ஆழமானது” என்ற கருத்தடங்கிய ஒரு ஆங்கிலக் கவிஞர் எழுதிய கவிதை ஒன்றைச் சுவைத்து நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார்!”

“THE BRAIN is wider than the sky.

For, put them side by side,

The one the other will include

With ease, and you beside.

The brain is deeper than the sea.

For, hold them, blue to blue,

The one the other will aborb,

As sponges, buckets do.

– EMILY DICKINSON (1830-1886)

It’s not that I’m so smart; it’s just that I stay with problems longer.

– ALBERT EINSTEIN (1897-1955)

இத்தகைய மனிதனின் அறிவு பகுத்தறிவு வளர்ச்சிக்கு மூல முக்கிய பருப்பொருளான மூளை முழுமையாக செயல்பட அதன்மீது பூட்டப்பட்ட விலங்குகளை உடைக்க வேண்டும் என்கிறார் டாக்டர் தியோ.

(நாளை)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *