தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி நேற்று (16.8.2024) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தை (Kolathur Ornamental Fish Market) சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி காலனி, பாடி மேம்பாலத்தின் கீழ் அமையவுள்ள இடத்தினை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமானபி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு களஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரியத் தலைவர் ப.ரங்கநாதன், உள்ளாட்சி பிரதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.