வைகோ தாக்கல் செய்த நியூட்ரினோ ஆய்வு மய்ய வழக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

1 Min Read

மதுரை, ஆக. 15– நியூட்ரினோ ஆய்வு மய்ய விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் மனுத் தாக்கல் செய்ய ஒன்றிய அரசிற்கு கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தர விட்டுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கடந்த 2015ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நியூட்ரினோ திட்டத் துக்காக தேனி மாவட்டம் பொட்டி புரம் பகுதியில் ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தால் தேனி பகுதியில் நில வளம் அழியும். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பசுமைத் தொடர்களுக்கு பேரழிவு ஏற்படும். விவசாயம், தண்ணீர், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

மனித உயிர்களுக்கு ஆபத்து நேரிடும். ஆய்வு மய்யம் அமைய உள்ள பகுதியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் முல்லைப் பெரியாறு அணையும், 60 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் இடுக்கி அணையும் அமைந்துள்ளன.

மக்களை பாதிக்கச் செய்யும் திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசு எப்போதும் தமிழ்நாட்டைத் தேர்வு செய்கிறது. எனவே, நியூட்ரினோ ஆய்வு மய்யம் அமைக்கும் திட் டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறி யிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று (14.8.2024) நீதிபதிகள் சுப்பிர மணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒன்றிய அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. கால அவகாசம் வழங்கி வழக்கை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *