தி.மு.க. ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகள் சாதனை மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Viduthalai
2 Min Read

சென்னை, ஆக.15 மூன்றாண்டு திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் துறை வாரியான திட்டங்கள் அடங்கிய “தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!” என்ற மூன்றாண்டு சாதனை மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திமுக அரசு கடந்த 2021 மே மாதம் 7-ஆம் தேதி பொறுப்பேற்று, 3 ஆண்டுகள் நிறைவடைந்து, 4-ஆம் ஆண்டிலும் தொடர்ந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி, பல்வேறு துறைகளிலும் சாதனைகள் நிகழ்த்தி வருகிறது. தமிழ்நாடு இந்திய அளவில் படைத்துள்ள சாதனைகளை ஒன்றிய அரசின் நிட்டி ஆயோக், நிர்யாத் அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் பறைசாற்றியுள்ளன.

தமிழ்நாடு இந்தியாவில் உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் முதல் மாநிலம், தொழில் வளர்ச்சி யில், வேளாண் உற்பத்தியில், மருத்துவத்துறையில் முன்னணி மாநிலம், ஆயத்த ஆடைகள், ஜவுளி ஏற்றுமதியில் முதலிடம், மகளிர் முன்னேற்றத்தில், கர்ப்பிணிகள் சுகாதாரத்தில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில், மகப்பேறுக்கு பிந்தைய சிசு கவனிப்பில் முதலிடம், தோல் பொருட்கள் ஏற்றுமதி, மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம், பொறியியல் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் 2-ஆம் இடம், தொழில் வளர்ச்சிக்கான 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடம் போன்ற சாதனைகளை படைத்து வருகிறது.

இவைமட்டுமினறி, முதல மைச்சரின் காலை உணவுத் திட்டம் தெலங்கானா மாநிலம் மற்றும் கனடா நாட் டிலும்பின்பற்றப்படுகிறது. நான்முதல்வன் போன்ற திட் டங்கள் தேசிய அளவிலும், வெளிநாடுகளிலும் புகழ் பரப்புகிறது. திட்டங்கள்,அவற்றின் பயன்கள் ஆகியவற்றைத் துறைவாரியாகத் தொகுத்து தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை ‘தமிழரசு’ இதழ்மூலம் ‘தலை சிறந்த மூன்றாண்டு! தலை நிமிர்ந்த தமிழ்நாடு!’ எனும் சாதனை மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, துவாக்குடி, சிட்கோ வளாகத்தில் அமைந் துள்ள அரசு கிளை அச்சகத்தில் ரூ.1.82கோடியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, எழுதுபொருள் அச்சகத்துறை ஆணையர் வெ.சோபனா, செய்தித்துறை செயலர் வே. ராஜா ராமன்,செய்தித் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *