புதுக்கோட்டை, ஆக. 14- புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி கடைவீதியில், சுயமரி யாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா திராவிடர் கழக பொதுக்கூட்டம் 1.8.2024 மாலை அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டக் காப்பாளர் ஆ.சுப்பையா தலைமை வகித்தார். திருமயம் ஒன்றியத் தலைவர் அ. தமிழரசன் அனைவரையும் வரவேற்றார். புதுக்கோட்ட கழக மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாநில ப.க. அமைப்பாளர் அ.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் துவக்கவுரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் சு.கண்ணன், ஒன்றியச் செயலாளர் க.மாரியப்பன், மாவட்ட துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி, பொன் னமராவதி, ஒன்றியத் தலைவர் சித.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் வீ.மாவலி, புதுக்கோட்டை நகரச் செயலாளர் ரெ.மு.தருமராசு, மகளிரணி வீர.வசந்தா, பொன்மதி, ம.மு.கண்ணன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தமிழ் நாட்டில் சுயமரியாதை கடந்த நூறு ஆண்டுகளில் செய்திருக்கும் சாதனைக ளைப் பற்றி சிறப்புச் சொற் பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் விரி வாக பேசினார்.
சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
Leave a Comment