முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றுகிறார் தமிழர் தலைவருக்கு தகைசால் தமிழர் விருது

1 Min Read

சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பு செய்கிறார் முதலமைச்சர்

சென்னை,ஆக.14- நாட்டின் 77ஆவது சுதந்திர தினம் நாளை (15.8.2023)  கொண்டாடப்படு கிறது. சென்னை கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி உரை நிகழ்த்த உள்ளார்.

விழா மேடையில், ‘தகைசால் தமிழர்’ விருதை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மு.க.ஸ்டாலின், வழங்குகிறார்.

சாதனையாளர்களுக்கு விருது

டாக்டர் அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்-அமைச்சர் விருதுகள், முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா மேடையில் வழங்கி சிறப்பு செய்கிறார்.

முன்னதாக காலை 8.45 மணிக்கு கோட்டை கொத் தளத்திற்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்கிறார்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சருக்கு முப்படை அதிகாரிகளை தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.

முதலமைச்சர் கொடி ஏற்றுகிறார்

இதன்பின்பு முப்படையினர் மற்றும் காவல் துறை யினரின் அணிவகுப்பு மரியாதையை மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார். பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடி யேற்றும். இடத்துக்கு முதல்-அமைச்சர் சென்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்துவார்.

இதன்பின்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக் களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடு களையும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும், காவல்துறையினரும் செய் துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *