தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 882 ஊதியம் விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

viduthalai
2 Min Read

சென்னை, ஆக.2 அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.882 ஊதியமாக வழங்கப்படும் என்ற நிர்வாகத்தின் உத்தரவுக்கு தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அரசு விரைவு போக்கு வரத்துக் கழகத்தில் தொலை தூரங்களுக்குச் செல்லும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு பணியாளர் பற்றாக்குறை காரணமாக தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.535 மட் டுமே வழங்கப்பட்டது. இது குறைந்தபட்ச கூலி சட்ட விதி, போக்குவரத்து தொழி லாளர்களின் ஒப்பந்த விதிகள் உள்ளிட்டவற்றுக்கு முரணாக இருப்பதாக சிஅய்டியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட வேலைநிறுத்த அறிவிக்கை மீதான சமரச பேச்சுவார்த்தையிலும் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டப் படி ஊதியம் வழங்க வேண் டும் எனவும், இதற்காக போடப்பட்ட ஒப்பந்தம் செல்லாது எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. இதன டிப்படையில், குறைந்தபட்ச கூலி சட்டப்படி விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என தொழிலாளர் தனி இணை ஆணையரும் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, விரைவு போக்குவரத்துக் கழக இயக்கப் பிரிவு பொது மேலாளர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற வாரிய கூட்டத்தில் நிறை வேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலும், கடந்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி தொழிலாளர் நலத்துறை பிறப்பித்த அர சாணையின்படியும் ஓட்டுநர், நடத்துநர் பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்களுக்கும், தொழில் நுட்ப பணியாளர்க ளுக்குமான குறைந்தபட்ச ஊதியத்தில் திருத்தம் செய் யப்படுகிறது. அதன்படி நாளொன்றுக்கு டிசிசி பணியாளர்களுக்கு ரூ.882-ஆம் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ.872-ஆம் ஊதியமாக வழங்கப் பட வேண்டும்” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இந்த உத்தரவுக்கு சிஅய்டியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, “விரைவு போக்குவரத்துக் கழகத்தின் குறைந்தபட்ச கூலி உத்தரவை வரவேற்கிறோம். அதேநேரம், ஒப்பந்தப்படியான ஊதியத்தை விட இது குறைவாகும். எனவே, நிர்வாகம் ஒப்பந்தப்படியான ஊதியத்தை வழங்க வேண்டும்,” என்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *