பொள்ளாச்சியில் 55 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

1 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

15.08.2023 செவ்வாய் கிழமை பொள்ளாச்சி கழக மாவட்டம், பொள்ளாச்சி, வெங்கடேசா காலனி, அய்.டி.எம். அரங்கில் 55 மாணவர்களுடன் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்று திரா விடர் கழக மாவட்ட செயலாளர் அ.இரவிச்சந் திரன்  உரையாற்றினார். 

மாவட்ட தலைவர் சி.மாரிமுத்து தலைமை யேற்று உரையாற்றினார் கழக காப்பாளர் பொறி யாளர் தி.பரமசிவம் தொடக்கவுரையாற்றினார். அய்டிஎம் பயிற்சி மய்ய இயக்குநர் மிஞிவி சரவணன் பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினர். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங் கிணைத்து நடத்தினார்.மாநில பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி தந்தை பெரியார் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார் தொடர்ந்து மாலை 6 மணி வரை பல தலைப்புகளில்  வகுப்புகள் நடைபெற்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *