இதுதான் சாமி சிலைகளின் சக்தியோ! பதுக்கி வைக்கப்பட்ட சிலைகள் மீட்பு பதுக்கிய ஆசாமிகள் கைது

viduthalai
1 Min Read

சென்னை, ஜூலை 23-சென்னையில் 2 பழங்கால சிலைகள், உலோக வாள் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில், சுமதி, பிரகாஷ், தங்க ராஜ் மற்றும் ராஜேஷ் கண்ணன் என 4 பேரை கைது செய்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் குடியிருக்கும் சுமதி என்பவர் வீட்டில் இருந்து இச்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நாகாத்தம்மன் உலோக சிலை, உலோக உடைவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சுமதியிடம் விசாரித்ததில், கோயிலில் இருந்து திருடப்பட்டதாகவும், சரியான நேரத்தில் விற்க காத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

சுமதியும், அவரது கணவர் பிரகாசும் சிலை குறித்து எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்காததால் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சிலைகள் எந்த கோயிலில் இருந்து எடுக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *