கிருட்டினகிரி, ஜூலை 17 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி – மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அய்ந்து மய்யங்களில் அய்ந்து குழுக்கள் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் 11.7.2024 அன்று தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டு, 15.7.2024 அன்று சேலத்தில் நிறைவு பெற்றது.
சென்னையில் தொடங்கிய 5ஆம் பிரச்சார பயணக் குழு சொற்பொழிவாளர் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பயண ஒருங்கிணைப்பாளர் தருமபுரி செல்லதுரை மற்றும் பயணக்குழுவினர் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு தலைமையில் கிருட்டினகிரி மாவட்டம் வருகை தந்த பிரச்சார பயணக் குழுவிற்கு கிருட்டினகிரி நகராட்சி எல்லையில் 13.7.2024 இரவு 7.30 மணியளவில் கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாநில ப.க. துணைப்பொதுச்செயலாளர் அண்ணா.சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், ஒன்றியத் தலைவர் த.மாது, நகர செயலாளர் அ.கோ.இராசா, மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் பூ. இராசேந்திரபாபு உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பான வகையில் வரவேற்பு வழங்கினர்.
இரவு கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் பயணக்குழுவினர் தங்கி ஓய்வெடுத்தனர்.
பரப்புரை பயண பிரச்சாரக் கூட்டம் 14-7-2024 கிருட்டினகிரி புதியபேருந்து நிலையம் கிருட்டினகிரியில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கழக இளைஞரணி – மாணவர் கழகத்தினர் இருசக்கர வாகனப் பரப்புரை பயணக் குழு 14-7-2024 காலை 8 மணியளவில் கார்நேசன் திடல் பெரியார் மய்யத்திலுள்ள தந்தைபெரியார் சிலைக்கு கிருட்டினகிரி மாவட்ட தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி தலைவரும் விடுதலை வாசகர் வட்டத் தலை வருமான வெ.நாராயணமூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி அனைவரையும் வரவேற்றார். கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யத்திலுள்ள பெரியார் சிலை அருகிலிருந்து இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் தொடங்கி, ரவுண்டானா 5 ரோடு, காந்தி சாலை, பழையபேட்டை, தர்மராசா கோவில்தெரு, பெங்க ளூரு சாலை, புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் நீட் தேர்வின் பாதிப்புகளை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெ.புகழேந்தி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்த னர். பயணக்குழுவில் வருகை தந்த அனைவருக்கும் மாவட்ட தி.மு.க. இலக்கியணி தலைவர் வெ.நாராயணமூர்த்தி பயனாடை அணிவித்து சிற்பித்தார். வி.சி.க.மாவட்டச் செயலாளர் அ.மாதேசு கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பெரியார் உள்ளிட்ட பயணக்குழு நிர்வாகிகளுக்கு சால்வை அணி வித்து சிறப்பித்து வரவேற்றார்.
கிருட்டினகிரி இராயக்கோட்டை சாலை அருகேயுள்ள கலைஞர் சிலைக்கு கழக துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இருசக்கர வாக னப் பிரச்சாரம் தொடர்ந்து, ஓசூர் கழக மாவட்டத்துக்கு மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை கழக அமைப்பாளர் ஊமை. செயராமன், மாநில ப.க.துணைப் பொதுச்செயலாளர் அண்ணா.சரவணன், மாநில மகளிரணி தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் ச.மணிமொழி, திமுக இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணமூர்த்தி, மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் டி.சி.ஆர். தினேஷ்குமார், துணை அமைப்பாளர் மகேந்திரன், விசிக மாவட்டச் செயலாளர் அ.மாதேசு, விசிக ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி இரமேசு, காங்கிரஸ் நிர்வாகி ரகமத்துல்லா, மதிமுக நிர்வாகி டைலர் சந்திரன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டத் தலைவர் சானவாஸ், மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட விவசாய அணி தலைவர் இல. ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கா.மாணிக்கம், நகரத் தலைவர் கோ.தங்கராசன், மாவட்ட ப.க. துணைச் செயலாளர் மா.சிவசங்கர், காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், தொழிலாளரணி நிர்வாகி செ.ப.மூர்த்தி,பெரியார் பிஞ்சு மூ. சங்கத்தமிழ், கார்க்கி, இரவிந்திரன் மற்றும் அனைத்துக் கட்சி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துக்கொண்டு வரவேற்று வாழ்த்தினர். நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொகுக்கப்பட்ட நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பெரும் பயணம் ஏன்? என்ற வெளி யீடு நூல்களை கழகத்துணைப் பொதுச்செயலாளரிடம் அனைத்து கட்சி நிர்வாகிகள் உரிய தொகை வழங்கி நூலைப் பெற்றுகொண்டனர்.