கோவையில் வழக்குரைஞர்கள் அலுவலகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

1 Min Read

திராவிடர் கழகம்

வழக்குரைஞர்கள் ஆ.பிரபாகரன், ஆ. சசிகுமார் ஆகியோரின் ‘ழகரம்’ சட்ட மய்ய அலுவலகத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். தமிழர் தலைவரை வரவேற்று வழக்குரைஞர்கள் பயனாடை அணிவித்தனர். வழக்குரைஞர்கள் ஆ.பிரபாகரன், ஆ. சசிகுமாருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். ‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை ரூ.7,000த்தை வழக்குரைஞர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர். (கோவை, 13.7.2024)

திராவிடர் கழகம்

கோவை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட கழகத் தலைவர் கோவை மா.சந்திரசேகரன் தலைமையில் பயனாடை அணிவித்து தோழர்கள் வரவேற்றனர். * வழக்குரைஞர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் படங்களுக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: கோவை மாவட்டக் கழகத் தலைவர் மா. சந்திரசேகரன், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயகுமார், பெரியார் மருத்துவக் குழுமம் இயக்குநர் டாக்டர் கவுதமன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (கோவை, 13.7.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *