மணிப்பூர் வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக.20 மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் பயற்சி பெற்று வருவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:

கடினமான சூழலுக்கு இடையே மணிப்பூர் விளை யாட்டு வீரர்கள் அதனால் துவளாமல் மீண்டுள்ளது மிகவும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது. அவர்கள் தமிழ்நாட்டில் தங்கள் பயிற்சியைத் தொடங்குவதைக் கண்டு, நமது நெஞ்சங்கள் பெருமிதத்தால் பொங்கு கின்றன.

மணிப்பூரில் இருந்து தமிழ்நாட்டில் பயிற்சி பெற வந்துள்ள 15 வீரர்கள் மற்றும் 2 பயிற்சி யாளர்கள் இப்போது எங்கள் விளையாட்டுக் குடும்பத்தின் ஒரு பகுதியாகி உள்ளனர். இது எல்லைகளுக்கு அப்பால் பிணைப்புகளை வலுப் படுத்துகிறது. நாம் ஒன்றிணைந்து, இந்தியாவின் ஒற்றுமை உணர்வைத் தழுவிக் கொள்வோம்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் பதிவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *