மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக “மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர்” அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவுநாள் கூட்டம்

Viduthalai
1 Min Read

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறி வுறுத்தலின்படி அறிவியல் வளர்க்க ஆயுளைக் கொடுத்த  மராத்திய மாநிலத்தின் மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் மறைந்த நாளை தேசிய அறிவியல் நாளாக கடைப்பிடித்து  தமிழ்நாடெங்கும் கூட் டங்கள் நடத்தப் படவேண்டும் என்று அறிவித்துள்ளார்.

அதுபோன்று மும்பையிலும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக “மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவு நாள் கூட்டம்  தாராவி கலைஞர் மாளிகையில் 20.08.2023 மாலை 7.00 மணிக்கு நடைபெற உள்ளது. மும்பை திராவிடர் கழகத்தின் தலைவர் பெ.கணேசன் வரவேற்புரையாற்ற,  மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் படத்திற்கு அய்யா முல் லுண்ட் பாலசுப்ரமணியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். இந்நிகழ்வு மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர்  அ.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு கழகத் தோழர்கள் சோ. ஆசைத்தம்பி, அய்.செல்வராஜ், பெரியார் பாலாஜி, முலூண்ட் ஆ.பாலசுப் பிரமணியம், ஸ்டீபன் ரவிக்குமார், கயல்விழி (ஜிமிஷிஷி), மும்பை திமுக மூத்த தலைவர் என்.வி.சண்முகராசன் ஆகியோர் முன்னிலை வகிக்க நினைவேந்தல் உரை சு.குமணராசன் சிறப்புரையாற்றவுள்ளார் . 

அனைவரும் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையாற்றும்  படி மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

– மும்பை பகுத்தறிவாளர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *