ஒட்டன்சத்திரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம்

Viduthalai
1 Min Read

அரசியல்

ஒட்டன்சத்திரம், ஆக. 20 – பழனிமாவட்டம் ஒட்டன் சத்திர நகர கழகத் தலைவர் வழக்குரைஞர் ஆனந்தன்-ஆசிரியர் சத்தியப்பிரியா ஆகியோரது சுயமரியாதைத் திருமணம் 18-.8.-2023 அன்று மாலை 6-30 மணியளவில் விருப்பாச்சி சமத்துவபுரம் தந்தை பெரியார் சிலை முன்பு நடைபெற்றது. 

இந்நிகழ்வை பழனி மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் ஒருங்கிணைத்தார்.

வேடசந்தூர் இராம கிருஷ்ணன் தலைமை யேற்க, ப.க மாவட்டத் தலைவர் ச.திராவிடச் செல்வன், அய்யூஎம்எல் மா.இளைஞரணி தலை வர் அஜ்மத் அலி, தாராபுரம் வழக்குரைஞர் சக்தி வேல், இராமசாமி ஆகி யோர் முன்னிலையில் மணமக்கள் சுயமரியா தைத் திருமண உறுதி மொழி கூறி மலர் மாலை மாற்றிக்கொண்டனர்.

மேலும் மணமக்கள் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணி வித்து தந்தை பெரியார் வாழ்க! , தமிழர்தலைவர் ஆசிரியர் வாழ்க! ,அம் பேத்கர் வாழ்க!  அறிஞர் அண்ணா வாழ்க! , அன்னை மணியம்மை யார் வாழ்க!, கலைஞர் வாழ்க,!, என்று முழக்க மிட்டபோது பொதுமக்க ளும் தாமாக முன்வந்து முழக்கமிட்டனர். இது அனைவரையும் நெகிழச் செய்தது.

மேலும் இந்நிகழ்வில் சம்பத், சுகவனம், புரூஸ் பெரியார், சி.இராதா கிருட்டிணன், பெ.இரணி யன், ச.பாலசுப்பிரமணி, கருப்புச்சாமி, தாராபுரம் தோழர்கள் புள்ளியான், ஆ.முனீசுவரன், ப.கோபால்,  முத்தரசு, திருமூர்த்தி, குட்டி(எ) கணேசன், மற்றும் தடா மதி, சு.மருதமூர்த்தி, கார்க்கி, பெரியார்முத்து, கபாலி, பெரியார் நம்பி, சண்முகவேலு, அ.தமிழ் முத்து, தமிழ் மணி, பழனி ராஜா, சி.பாவேந்தன்,  மன்சூர், காஜா, வாஞ்சிநாதன், பொன்.முருகா னந்தம், மற்றும் “மார்க்ஸ்-அம்பேத்கர்-பெரியார்” பயிற்சி மய்யத்தினர் உள் ளிட்ட தோழர்கள், பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்றும் நினைவுப் பரிசுகள் , இயக்க நூல்கள்  மற்றும் பெரியார் படங் கள் வழங்கி மணமக்களை வாழ்த்தினர். இறுதியாக திண்டுக்கல் காஞ்சித் துரை அனைவருக்கும் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *