சென்னை – வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று (20.8.2023) ‘நீட்’டுக்கு எதிராக நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தை மாலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறப்போருக்குத் தலைமையேற்ற தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் – உதயநிதி ஸ்டாலின் அவர்க ளுக்கு பொன்னாடை அணிவித்து, கழகப் புத்தகங்களை வழங்கி, பழச்சாறு வழங்கி முடித்து வைத்தார். தி.மு.க. சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர், பி.கே.சேகர்பாபு, தி.மு.க. சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா. சுப்பிரமணியன், தயாநிதிமாறன், தி.மு.க., மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன், தி.மு.க. மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன், தி.மு.க. மருத்துவ அணித் தலைவர் டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நே.சிற்றரசு, தி.மு.க. இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.