ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவியல் மனப்பாங்கு பரப்பும் கருத்தரங்கம்

Viduthalai
1 Min Read

அரசியல்

ஒசூர், ஆக. 21 – ஒசூரில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவு அறிவியல் மனபாங்குப் பரப்பும் கருத்தரங்கம் பேராசிரியர் கு.வணங்காமுடி தலைமையில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவரையும் ப.க. மாவட்ட செய லாளர் செ.பேரரசன் வரவேற்றார்.அதனை தொடர்ந்து தபோல்கர் உருவப் படத்தினை விடுதலைசிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் எம்.ராமசந்திரன்,மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜாகீர் ஆலம் ஆகியோர் திறந்து வைத்தனர். 

மாவட்ட கழக தலைவர் சு.வன வேந்தன், எழுத்தாளர் கி.சு.இளங்கோவன் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து மந்திரமா?தந்திரமா? என்ற அறிவியல் நிகழ்ச்சியை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அரிச்சந்திரன் நிகழ்த்திக்காட்டி விளக்கமளித்தார்.

இந்நிகழ்ச்சியில் கழக பொதுகுழு உறுப்பினர் அசெ.செல்வம், பகுத்தறி வாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் ராமேசுவரன், கலைத்துறை மாவட்ட அமைப்பாளர் மனோகரன், மதிமுக இணையதள தொடர்பாளர் அம்சுராஜ், மோகன்ராஜ் கருமலை தமிழாழன், திருநாவுக்கரசு, குமணன்,  ஒப்புரவாளன், திராவிடர் கழக மகளிர் பாசறை மாவட்ட அமைப்பாளர் கிருபா, இளம்தமிழ், வழக்குரைஞர் ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக ஒசூர் மாநகர பகுத்தறி வாளர் கழகத் தலைவர் பேராஜன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *