தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.24.73 கோடி உதவித்தொகை சட்டமன்றத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

2 Min Read

சென்னை, ஜூன் 27- சட்டப் பேரவையில் 25.6.2024 அன்று பட்டு வளர்ச்சித் துறையின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார்.

* தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு தனி பட்டுப் புழு வளர்ப்பு மனை அமைக்க ரூ.24 கோடி 73 லட்சத்து 13 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

* 6500 ஏக்கரில் அதிக மகசூல் தரும் மல்பெரி ரகங்கள் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 7 கோடியே 83 லட்சத்து 75 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

* பட்டுக் கூடுகளின் தரம் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.6 கோடி 80 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன பட்டுப்புழு வளர்ப்பு தள வாடங்கள் மற்றும் பண்ணை உப கரணங்கள் வழங்கப்படும்.

* பட்டுப்புழு வளர்ப்பில் 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.50 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் பட்டுப் புழு வளர்ப்பு நோய் தடுப்பு மருந்து பொருட்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

* 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.1,64,50,000 மதிப்பீட்டில் பட்டு வளர்ப்பு குறித்து தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும்.

* 250 முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு ரூ.87 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பவர் ட்ல்லர் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

* மல்பெரி நாற்றுகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உதவி அளித்திட நாற்பது ஏக்கர் பரப்பில் கிசான் மல்பெரி நாற்றங்கால் அமைக்கும் விவசாயிகளுக்கு ரூபாய் 15,00,000 நிதி உதவி வழங்கப்படும்.

* பட்டு விவசாயிகளுக்கு தரமான இளம் பட்டுப்புழுக்கள் வளர்ப்பு செய்து விநியோகம் செய்திட ரூ.39 லட்சம் மதிப்பில் மூன்று பெரிய அளவிலான இளம் முழு வளர்ப்பு மய்யங்கள் அமைக்க மாநில அரசு நிதியாக ரூ.9,75,000 வழங்கப்படும்.

* மாநிலத்தின் பட்டு நுறுப்பு பிரிவை மேம்படுத்தும் விதமாக கூடுதலாக பட்டு நோக்கு அலகுகள் ரூ.3 கோடியே 45,37,000 மதிப்பீட்டில் நிறுவிட மாநில அரசு நிதியாக ரூ.86,10,000 வழங்கப்படும்.

* தர்மபுரி மாவட்டத்தில் நவீன அம்சங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம் அமைக்கப்படும்.

* நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அணைக்கட்டி பாளையம் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பட்டுக்கூடு அங்காடிவளாக ரூ.2 கோடி 20 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும்.

* மாநில அளவில் சிறந்த மூன்று பட்டு விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் ரொக்க பரிசுகள் வழங்கப்படும்.

* மாநில அளவில் சிறந்த மூன்று விதைக்கோடு உற்பத்தியாளர்களுக்கு ரூபாய் 2,25,000 ரொக்க பரிசுகள் வழங்கப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *