இப்படியும் ஒரு மூடத்தனம்! காவல்துறை ஆய்வாளர் நலம் பெறுவதற்காக கூட்டு பிரார்த்தனையாம்!

1 Min Read

புதுநகர் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் குருமூர்த்தி. இவரது மனைவி கீதா. இவரும் காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் காவல்துறை ஆய்வாளர் குருமூர்த்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுவை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் காவல்துறை ஆய்வாளர் குருமூர்த்தி பூரண குணமடைய வேண்டி கடலூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ராஜகோபாலசுவாமி கோவிலில் கடலூர் உட்கோட்ட காவல்துறையினர் சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நடந்ததாம். கடலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு தலைமையில் காவல்துறை உதவி ஆய்வாளர் கதிரவன், ருத்திராம்பாள், கவியரசன், சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், ஏட்டு அருள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டார்களாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *