பெண்கள் வளர்ச்சித் திட்டம்

1 Min Read

ஆயிரம் பெண்கள், திருநங்கை ஓட்டுநர்களுக்கு
ஆட்டோ வாங்க ரூபாய் ஒரு லட்சம் மானியம்
அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை, ஜூன் 22- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (21.6.2024) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்டுள்ள அறிப்புகள் வருமாறு:

* தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்கள் புதிதாக ஆட்டோ வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

* பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி ரூ.24.90 லட்சம் செலவில் வழங்கப்படும்.

* தொழிற்சாலைகளில் பயன்பாட்டில் உள்ள நவீன தொழில்நுட்ப யுத்திகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ரூ.15 லட்சம் செலவில் பயிற்சி வழங்கப்படும்.

*தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களுக்கு ரூ.29.65 லட்சம் செலவில் மடிக்கணினிகள் வழங்கப்படும்.

* தமிழ்நாடு தொழிலாளர்கள் கல்வி நிலையத்தில் நிர்வாக அலுவலகம் மற்றும் கணினி தொடர்பான வசதிகள் மேம்படுத்தப்படும்.

* புதிதாக வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள் மற்றும் பிற தொழில் வாய்ப்புகள் குறித்து ஊடாடல் காணொலி காட்சிப்பதிவுகள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிப்பரப்படும்.

*32 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள வகுப்பறைகளில் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வசதி ரூ.10.11 லட்சம் செலவில் ஏற்படுத்தி தரப்படும்.

*அரசு தொழிற்பயிற்சி நிலைய விடுதிகளில் ரூ.92 லட்சம் செலவில் நூலகங்கள் அமைக்கப்படும்.
தனியார் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *