குற்றப் பத்திரிகையை எந்த மொழியிலும் வழங்கலாம் விசாரணை அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஆக. 27-  ‘நீதிமன்றத்தின் வழக்காடு மொழியில்தான் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டு மென எந்த சட்டப்பிரிவும் குற்ற வியல் நடைமுறைச் சட்டத்தில் இல்லை’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் மாண வர் சேர்க்கை மற்றும் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான அம்மாநில அரசின் தேர்வாணைய மான ‘வியாபமில்’ பல முறைகேடு நடந்தது 1995இல் கண்டுபிடிக்கப் பட்டது.

இந்த வழக்கு 2015இல் சிபி அய்க்கு மாற்றப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட நரோட்டம் தாகத் மற்றும் சுனில் சிங் ஆகியோர், ஆங்கிலத்தில் தாக்கல் செய்த சிபி அய்யின் குற்றப்பத்திரிகை தங்க ளுக்கு புரியாததால் அது சட்ட விரோதன மானது என்றும் தங்களுக்கு பிணை கோரியும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய் யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிபதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் ராஜேஷ் பிண்டால் ஆகியோர் அளித்த உத்தர வில், ‘‘நீதிமன்றத்தின் வழக்காடு மொழியில்தான் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் குற்ற வியல் நடைமுறை சட்டத்தில் எந்த சட்டப்பிரிவும் குறிப்பிடவில்லை. 

எனவே  குற்றம் சாட்டப்பட்டவ ருக்கு புரியவில்லை என்பதற்காக அதை சட்டவிரோதமானது என கூற முடியாது. அதன் அடிப் படையில் பிணையும் வழங்க முடியாது.

அதே சமயம், தனக்கு எதிரான என்னென்ன குற்றச்சாட்டுகள் இருக் கின்றன என்பதை குற்றவாளி அறிந்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். அவருக்கு மொழி புரியாத பட்சத்தில் மொழி பெயர்ப்பு செய்து தர வேண்டும்.

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஏற்கெ னவே ஆங்கிலம் தெரிந்துள்ளது. அவர்கள் ஆங்கி லத்தில் எழுதிய படி வங்களில் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளனர். இதனால் மொழி பெயர்ப்பு நகல் வழங்க முடியாது என்ற விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும்’’ என தீர்ப்பளித் தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *