காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது

1 Min Read

பிலிகுண்டுலு, ஆக 28 கருநா டகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற் றின் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனி டையே கருநாடக அணைகளில் இருந்து தமிழ்நாட் டிற்கு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக இரு மாநில அரசு களுக்குமிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், கருநாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 4092 கன அடியில் இருந்து 7068 கன அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ்.அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 5068 கன அடியாக அதிகரித் துள்ளது. கபினி அணையில் இருந்து 3ஆவது நாளாக 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *