ஆயிரம் கலைவாணர்களைத் தேடுகிறோம்! தேடுகிறோம்!!

1 Min Read

– கி.வீரமணி –

அரசியல், ஆசிரியர் அறிக்கை

இன்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களது நினைவு நாள் (30.8.2023)!

கலைவாணரின் பகுத்தறிவுத் தேன் தடவிய நகைச்சுவைக்கு ஈடேது? இணையேது?

அறிவுக்குப் பெருவிருந்து; 

அறியாமைக்கு தகுமருந்து!

எப்போதும் மகிழும் சிரிப்பு விருந்து!

வாழ்நாள் எல்லாம் வையத்தாருக்குக்

கொடையளித்து அரைத்த சந்தன மான

அற்புத வள்ளல்!

ஆனால், அவர் என்றும் ‘அறவிலை வணிகர்’ அல்லர்!

தொண்டறத்தின் தூய உருவம்

தொலைநோக்குப் பெரியாரின் ஒளிபட்டு 

ஜொலித்த நகைச்சுவைக் கடல்!

படித்த பாட புத்தகமோ 

பச்சை அட்டைக் ‘குடிஅரசு’ வார ஏடு!

‘குடிஅரசு’ ஏட்டில், ‘‘அய்யோ கிருஷ்ணா உனக்கா 14 ஆண்டுகள் சிறை!” – பெரியாரின் உருக்கமான தலையங்கம் ஒரு தனி இலக்கியம்!

உடுமலை நாராயண கவிராயரும், கலைவாணரும், அம்மையார் டி.ஏ.மதுரமும், அவரது குழுவினரும் அமைந்ததுபோல், வேறு ஒரு குழு கலை உலகம் எங்கும் காணாத புதுமை!

‘50-ம் 60-ம்’ என்று 1960 இல் மாற்றம் வரவேண்டும் என்று விழைந்தார்.

மற்றொரு 60 ஆண்டுகளும் கழிந்து விட்டது.

மாற்றத்தை ஒழிக்க சனாதனம் சல்லடம் கட்டி சவால் விடுகிறது!

இன்றும் ஆயிரம் கலைவாணர்கள் தேவை!

அவர் என்றும் வாழ்கிறார் –

வெல்க அவர் புகழ்!

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை
30.8.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *