“இந்தியா” கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்

Viduthalai
1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஆக. 31– ‘இந்தியா’ கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இடம்பெறும் என்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கொளத்தூரில் பல்வேறு கட்டமைப்புப் பணிகளை நேற்று (30.8.2023) அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

‘இந்தியா’ கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. அது இன்னும் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. சமையல் எரிவாயு விலை குறைப்பு, ‘இந்தியா’ கூட்டணிக்கான நெருக்கடி யாகப் பார்க்கவில்லை. தேர்தல் நெருங்குவதற்கான ஓர் அறிகுறியாகப் பார்க்கிறோம்.  பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் அது கூட ஆச்சரியமில்லை என்றார். 

இன்று பயணம்

‘இந்தியா’ கூட்டணியின் மூன்றாவது கூட்டுக் கூட்டம் மும்பையில் இன்று (31.8.2023) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை மும்பை பயணமானார். கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, நாளை (1.9.2023) இரவு அவர் சென்னை திரும்பவுள்ளார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *