இதற்கு ஒரு முடிவே இல்லையா? ஆன்லைன் ரம்மி – மற்றொரு இளைஞர் தற்கொலை

2 Min Read

மயிலாடுதுறை, மே 30 மயிலாடுதுறையில், இணைய வழி ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை பெரியத்தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் தினசீலன்(31). இவர், சுவாமிமலையில் உள்ள தனியார் விடுதியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், தினசீலன், புதன்கிழமை (29.5.2024) காலை வழக்கம் போல் எழுந்து சில பணிகளைச் செய்து விட்டு மீண்டும் தனது அறைக்குச் சென்றுள்ளார். பின்னர், நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராததால், அங்கு சென்று பார்த்தபோது, தினசீலன், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக மயிலாடுதுறையில் உள்ள அவரது உறவினர்களுக்கும், சுவாமிமலை காவல் நிலையத்துக்கும் விடுதி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து, தினசீலனின் தாயார் கஸ்தூரி, சுவாமிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தினசீலன் மயிலாடுதுறையில் பல்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கான ரூபாயை கடனாகப் பெற்று இணைய வழி ரம்மி விளையாடி அந்தப் பணம் முழுவதையும் இழந்துள்ளார். இதையறிந்த, அவரது உறவினர்கள், கடந்த 2 மாதத்துக்கு முன்புதான் சுவாமிமலையில் உள்ள தனியார் விடுதியில் அவருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளனர். அங்கு வந்தபிறகும், தினசீலன் இணைய வழி ரம்மி விளையாடி பல ஆயிரங்களை இழந்திருக்கிறார். அதனை திருப்பி தர முடியாததால், மன வேதனையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தற்கொலைக்கு முன்னதாக கடிதம் எழுதி அதை தனது பாக்கெட்டில் வைத்திருந்திருக்கிறார். அந்தக் கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மய்யங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *