முதமைச்சரின் காலை உணவுத் திட்டம் பிஞ்சுகளின் கை வண்ணத்தில் சித்திரம்: முதலமைச்சர் பாராட்டு

1 Min Read

அரசு, தமிழ்நாடு


கரூர், செப்.2-
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து பார்ப்பன நாளேடான ‘தினமலர்’ கொச்சைப்படுத்தி வெளியிட் டதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் பதிலடி சம்மட்டி அடியாக விழுந்து கொண்டிருக் கிறது.

இந்நிலையில் கரூர் மாவட்டம் கிருட்டிணராயபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குழந்தைகள் முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டத்தின் பலனை உலகிற்கு எடுத்துக்கூறும் வகையில் பள்ளி கரும்பலகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவிக்கு உணவு ஊட்டும் ஓவியத்தை வரைந்தனர். அதை சமூக வலைதளத்தில் ஒருவர் பகிர முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

 மும்பையில் இந்தியா கூட்டணி ஆலோசனை தொடர்பான நிகழ்ச் சியில் இருந்தபோது இப்படத்தை வரைந்த மாணவச் செல்வங்களுக்கு முதலமைச்சர் பாராட்டி வெளியிடப்பட்டுள்ள பதிவில்,

 ”இந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய்ப் பரப்புரைகளும் தோற் றோடும்!

அவர்களின் ஓவியத் திறன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *