பிரதமர் மோடி உழைப்பது அதானி உள்ளிட்ட தொழில் முதலாளிகளுக்கே! ராகுல் காந்தி குற்றச்சாட்டு

2 Min Read

அரசியல்

ராஞ்சி, செப். 3 சத்தீஷ்கார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டது. அந்தவகையில், நவ ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங் கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இதில் உரையாற்றும்போது அதானி விவகாரத்தை முன்வைத்து பிரதமர் மோடி மீது கடுமையாக குற்றம் சாட்டினார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உலகின் மிகப்பெரிய பொருளாதார பத்திரிகை ஒன்று சமீபத்தில் அதானி குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. பிரதமர் மோடிக்கு நெருக்க மான அவர், இந்தியாவில் இருந்து ஆயி ரக்கணக்கான கோடிகளை அபகரித்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று தனது பங்குகளின் மதிப்பை உயர்த்த பயன்படுத்தினார் என அதில் கூறப்பட்டு உள்ளது. யாருடைய பணம் வெளி நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது? அதானிக்கு எதிராக விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிடாதது ஏன்? ஏனெனில் அந்த விசாரணையின் விளைவு அதானிக்கு இழப்பை ஏற்படுத் தாது, வேறு யாரோ ஒருவருக்குதான் பிரச்சினையை உருவாக்கும்.பா.ஜன தாவும், பிரதமர் மோடியும் அதானி மற்றும் சில தொழில் அதிபர்களுக்காக மட்டுமே உழைக்கின்றனர். ஆனால் கரு நாடகா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ் தான், சத்தீஷ்கார் மாநிலங்கள் மட்டுமின்றி வருகிற தேர்தலில் தெலங்கானா, மத்திய பிரதேசங்களில் அமைக்க இருக்கும் எங்கள் அரசுகள் ஏழைகளின் அரசாகவே உள்ளன, அதானியின் அரசாக அல்ல. இதைப்போல பா.ஜனதா நாடு முழுவதும் வெறுப்பையும், வன்முறையையும் பரப்பி வருகிறது. ஆனால் காங்கிரசோ அந்த வெறுப்பு சந்தையில் அன்புக் கடையை திறக்க உழைத்து வருகிறது.

பழங்குடி மக்களை ஆதிவாசி என்று  அழைப்பதற்கு பதிலாக பாரதீய ஜனதா வனவாசி என்று அழைக்கிறது. ஏனெனில் இந்த மக்கள் காடுகளிலேயே வசிக்க வேண்டும் என்றே விரும்புகிறது. அங் கிருந்து வெளியேறி பல்வேறு துறைகளில் பணியாற்றும் அவர்களது கனவை நிறைவேற்ற விரும்பவில்லை. அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்தான் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக இருக்கிறது. நாட்டின் பொருளாதார முதுகெலும்பை பா.ஜ.க. சிதைத்தது. ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப் பிழப்பு நடவடிக்கையால் சிறு வணிகர்கள் வீழ்ச்சியடைந்தனர். 

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *