அரிய வாய்ப்பு – குரூப்-1 தேர்வுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மய்யங்களில் இலவச பயிற்சி

1 Min Read

சென்னை, மே 24 அனைத்து மாவட் டங்களில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தால் நடத்தப்படவுள்ள தொகுதி-1 தேர்விற்கு 90 காலிப் பணியிடங் களுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 28ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

தொகுதி 1-க்கான முதல் நிலைத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்ய அலுவலகங்களில் சிறந்த பயிற்று நர்களைக் கொண்டு நடத்தப்பட வுள்ளது. அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அள விலான மாதிரி தேர்வுகளும் நடத் தப்படும். இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ, மாண வியர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *